இராஜிற்கு எதிராக ரஞ்சன் பொலிசில் முறைப்பாடு – இராஜ் கைதாகும் சாத்தியம்..? (VIDEO)

(FASTGOSSIP | COLOMBO) – பிரபல பாடகர் இராஜ் வீரரத்னவுக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மிரிஹான பொலிசில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னால் சமூக வலைத்தளமொன்ருக்கு வழங்கப்பட்ட கருத்துக்களை திரிவுபடுத்தி அதனை இராஜ் வீரரத்ன சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக குறித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முறைப்பாடினைத் தொடர்ந்து இராஜ் வீரரத்ன கைது செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக சமூக ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.