வெயங்கொடை -நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள இராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்த விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.