இராணுவத்தால் வீதி தடைகள் அகற்றப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாலி முதல் பளை வரையான வீதியில் போடப்பட்டிருந்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தால் நேற்று (15) குறித்த வீதி தடைகள் போடப்பட்டிருந்தன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இவ்வாறு இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்படுவது சட்டவிரோதமானது என பொலிஸார் இராணுவத்தை தெளிவுப்படுத்தியமைக்கு அமைய இராணுவத்தால் குறித்த வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.