துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவச் சதிப் புரட்சிக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் அந்நாட்டின் பிரதமர் பினலி யில்த்ரிம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுகின்ற காட்சியை அந்த தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.