இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவருக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு படையினரை கைதுசெய்தமை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் சுமித் மாணவடு மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றினார்.