இருபதுக்கு-20 கிரிக்கெட் வராலாற்றில் அலிசா ஹீலி சாதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 02 ஆவது இருபதுக்கு – 20 போட்டி இன்று(02) இடம்பெற்று வருகின்ற நிலையில்,போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 02 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்களை அலிசா ஹீலி (Alyssa Healy) ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவே இருபதுக்கு-20 வராலாற்றில் தனிநபர் ஒருவர் அடித்த அதிகூடிய ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.