(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டி இன்று(01) இடம்பெறவுள்ளது.
மெல்போனில் இரவு நேர போட்டியாக இடம்பெறவுள்ள இந்த ஆட்டம், இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, 2 க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.