இருபத்தியொரு மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

(FASTNEWS| COLOMBO) – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 21 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று(24) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கை மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு மற்றும் கொப்பழங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.