இலங்கை கிரிக்கெட் அணி இரு சுற்றுத் தொடர்களில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி பங்ளாதேஷ் பயணமாகவுள்ளது.
ஒரு மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத் தொடரிலும், பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு சுற்றுத் தொடரிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.
மும்முனை ஒருநாள் சர்வதேச சுற்றுத் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையுடன் பங்ளாதேஷ், ஸிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. பங்ளாதேஷ் அணிக்கு எதிரான சுற்றுத் தொடரில் 02 டெஸ்ட் போட்டிகளும், 02 T-20 போட்டிகளும் உள்ளடங்குகின்றன.
முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பமாகும். முதலாவது T-20 போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma