இரு தரப்பு பிரச்சினையையும் தீர்க்க 14 நாள் அவகாசம்…

இரு தரப்பினரிடையேயும் காணப்படுகின்ற பிரச்சினைகளை 14 நாட்களுக்குள் முழுமையாக தீர்த்துக் கொண்டு அறிவிக்குமாறு அரசியலமைப்பு பேரவை பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் கூடிய போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இடையிலான பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.