இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொட பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.