இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதியதில் 6பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பேரூந்து ஒன்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(riz)