நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் குழாமில் கௌத்தம் கம்பீர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இரண்டு வருடங்களின் பின்னர் அவருக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் லோகேஸ் ராகுல் காயமடைந்ததன் விளைவாக, கௌத்தம் கம்பீர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் அஜய் ஷேர்க் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.