இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான கேள்வி தற்போது வெகுவாக குறைந்திருப்பதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகின்ற பொய்ப் பிரச்சாரம் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ கூறியிருந்தார்.
மேலும், வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியின் தரம் குறித்து தமது சங்கம் உத்தரவாதம் வழங்குவதாக அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.