இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதம் நேற்று(19) பரீட்சார்த்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்த புதிய புகையிரதம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.
10 புதிய புகையிரத எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது..
பரீட்சார்த்த சேவையின் பின்னர் அதன் பெறுபேறுக்கு அமைய, ஏனைய எஞ்சின்கள் மற்றும் பெட்டிகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.