எதிர்வரும் வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
நாட்டில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்கிலேயே குறித்த இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இதுவரை 3௦ வீதமாக இருந்த இறக்குமதி வரி, 25 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த, புதன்கிழமை பாராளுமன்றத்தில், ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க மேற்படி தெரிவித்துள்ளார்.