இறைச்சி இறக்குமதி வரியில் வீழ்ச்சி.

எதிர்வரும் வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து இறைச்சி இறக்­கு­மதி செய்யப்படவுள்ளது.

நாட்டில் மாடு அறுப்பதனை குறைக்கும் நோக்கிலேயே குறித்த இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதுவரை 3௦ வீதமாக இருந்த இறக்குமதி வரி, 25 முதல் 15 சத­வீதம் வரைக்கும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த, புதன்­கி­ழமை பாரா­ளு­மன்றத்தில், ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சட்­டத்தின் கீழ் கட்­ட­ளையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே சர்­வ­தேச வர்த்­தக இரா­ஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க மேற்படி தெரிவித்துள்ளார்.