ராமநாதபுரம் மே 23,
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் மரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடலுக்கு அடியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 2500 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை மண்டபம் மரைன் காவல் நிலைய சார்பு யாசர் மௌலானா தலைமையில் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்கு அடியில் சாக்கு மூட்டைகள் சில கயிற்றால் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்ட மரைன் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கடலுக்கு அடியில் இருந்த அந்த சாக்கு மூட்டைகளை கைபற்றி ரோந்து படகில் வைத்து சோதனை செய்த போது 9 சாக்கு மூட்டைகளில் சுமார் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து கடலுக்கு அடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்த மர்ம நபர் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை; மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.






