இலங்கைக்கு கைகொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில்

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் தொடர்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நாக்கோஆ சுவிட்ஸர்லாந்து டேவோவில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இன்னும், அடுத்த மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் தேவைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை வெளியிட்டார்.