இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்…

(FASTNEWS|COLOMBO) இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவரை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகம் ஏற்பட்டமையால் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

45 வயதான ஹஷீம் ரமதான் என்பவரே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.