இலங்கை அணிக்கு எதிரான முக்கோண ஒருநாள் சர்வதேச போட்டியில் சிம்பாபே அணி 29௦ ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத் தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தடிய சிம்பாபே அணி 50 ஒவர்கள் நிறைவில், 6 விக்கட்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஷிகந்தர் ராசா ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும், ஹெமில்டன் மசகட்சா 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அசேல குணரத்த 3 விக்கட்களையும், திசர பெரேரா 2 விக்கட்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு 291 ஓட்டங்கள் வெற்றி இலக்காகவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
#reeshma