இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை – ஈரான்

இலங்கையிடமிருந்து விமானங்களை குத்தகைக்கு எடுக்க தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இலங்கையிடமிருந்து விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஈரான் எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என ஈரான் பிரதி அமைச்சர்  Asghar Fakhrieh Kashan தெரித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து மூன்று விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள ஈரான் முயற்சித்ததாக வெளியான தகவல்கள் குறித்து அவர் இந்த பதிலை அளித்துள்ளார். ஈரானிய ஊடகங்கள் சிலவும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.