இலங்கையின் நிலைமையை புரிந்து கொண்டமைக்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய போது இலங்கையின் நிலைமையை புரிந்து கொண்டமைக்காக அனைத்து தரப்பினருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஏகமனதாக வாக்கெடுப்பு இன்றி நேற்று(23) நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.