இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு தொழில்நுட்ப அடிப்படையிலான உள்ளீடுகள் அவசியம் என மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் வருடாந்த சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்தியதர வருமானம் பெறுகின்ற நாடு என்ற அடிப்படையில் அதன் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் நவீன தொழில்நுட்பங்களை ஈர்ப்பதன் ஊடாக இது சாத்தியமடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.