இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது…

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐ.தே. க கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நண்பகல் 12 மணியின் பின்னர் அமெரிக்க தூதரகமும் அமெரிக்க நிலையமும் தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.