கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து வருகை தந்து கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது