(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) -இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 77 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
———————————————————————————-[UPDATE]
மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
