இலங்கையில் கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டது உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்குள்ளான இலங்கையின் முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே மேற்படி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.