(FASTNEWS|COLOMBO) இலங்கையில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை இன்று(22) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியான பகுதிகளுக்கு செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று(22) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விமானம் இன்று காலை ரத்மலான விமான நிலையத்தில் இருந்து பயணிக்கவுள்ளதாக விமான ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.