இலங்கையில் 10 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.