இலங்கையில் 5வது மரணமும் பதிவு (UPDATE)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 44 வயதுடைய மற்றுமொரு நபர் வெலிகந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் அண்மையில் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.