இலங்கை அணிக்கு சவாலாக அம்லா , டுமினி உள்ளிட்டோர் அணியில் இணைப்பு…

(FASTNEWS |COLOMBO)- இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்கா அணியில் ஆசிம் அம்லா, எய்டன் மார்க்ரம் மற்றும் ஜே.பீ.டுமினி ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்கா தற்போது உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான அணியை தெரிவு செய்து வருகிறது.

அதன் ஒருகட்டமாக ஜே.பீ.டுமினிக்கு எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பளிக்க தென்னாபிரிக்கா தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் கடந்த நான்கரை மாதங்களின் பின்னர் ஜே.பீ.டுமினி ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.