தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(05) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகிறது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.