இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசான் திலகட்ண நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து குறிப்பிட்டார்.
“..இலங்கை அணியின் வீரர்கள் தெரிவு சிறப்பாகவே இருக்கின்றது. எனினும் துடுப்பாட்ட வீரர்களின் தன்னம்பிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் எதிர்வரும் காலங்களில் அவற்றை சரிப்படுத்திக் கொள்ள முடியும்..” எனவும் ஹசான் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)