இலங்கை அரசாங்கம் சீனாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தம் வன வள பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பிலேயே மேற்கொள்ளவுள்ளதாக அரச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், குறித்த இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் தமக்குரிய அரிய வகை வளங்களை பரிமாறிக் கொள்ளவும், ஆய்வுகள் மற்றும் பயிற்சிகளுக்கு பயன்படுத்தவும் முடியும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.