இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி ​நேற்று(12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.