வாகன விபத்து ஒன்று தொடர்பிலான வாய் தர்க்கத்தில் நாவல, திறந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் தலையில் துப்பாக்கியினால் தாக்கி மிரட்டிய சம்பவத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட குறித்த மாணவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், கைதான ரமித் ரம்புக்வெல்ல இன்று(10) கொழும்பு, புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
#rism.