இலங்கை கிரிக்கட் அணியின் மற்றுமொரு வேகபந்து வீச்சாளரும் ஓய்வு

(FASTNEWS|COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளராகவும், ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையையும் குலசேகர பெற்றிருந்தார்.

இதேவேளை அண்மையில் ஓய்வு பெறுவதற்காக தனக்கு ஒரு போட் டியைப் பெற்றுத் தருமாறு நுவன் குலசேகர எழுத்து மூலம் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.