இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜோன் லெவிஸ் நியமனம்..

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நியுஸிலாந்து அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டிகளின் போது இவர் கடயையை ஏற்றுக் கொள்ள உள்ளதோடு, 2019 ஆம் நடைபெற உள்ள உலகி கிண்ண போட்டி வரையில் இவர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலன் சமரவீர கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.