இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான தலைவராக திஸர பெரேரா செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக உபுல் தரங்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தலைமைப் பதவிக்கு திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று(29) மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
####