இலங்கை கிரிக்கெட் அணியினை சமூக வலைதளங்களில் விமர்சிப்போருக்கு மஹேலவிடம் இருந்து எச்சரிக்கை…

இலங்கை அணியினை கேலி செய்தல் மற்றும் முரணான கருத்துக்களை சமூக வலையத்தளங்களில் காணக்கூடியதாக இருப்பதாகவும், அவர்கள் பலவீனமாக விளையாடினாலும் அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அவ்வாறு விளையாடவில்லை. அது ஒரு விளையாட்டு மாத்திரமே என இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் மஹேல ஜெயவர்தன அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தீர்வுகளுக்காக இதுகுறித்து மேலதிகமாக ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஆசியக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையினை தோற்கடித்ததை தொடர்ந்து ஆசியக் கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது, இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் ஊடாக தனிநபர் மற்றும் அணியினை இலக்கு வைத்து கருத்துக்களை பரிமாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.