(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூவரும் முறையே தலைவர், பிரதித் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.