இலங்கை கிரிக்கெட் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை…

இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் நேற்று(05) நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

குறித்த தேர்தல் கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெறவிருந்த போதும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், குறித்த இந்த தடை நீக்கப்பட்டுள்ள போதும் இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவில்லை.

6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் நடைபெறாவிட்டால், அதன் உறுப்புரிமை மறுபரிசீலனை செய்யப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.