(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திக்க ஹதுருசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
ஒப்பந்தத்தை தவறாக நிறுத்தியது மற்றும் அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை மேற்கோள் காட்டி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.