இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடொன்றை செய்யும் வகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.
இவர் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு முறைபாட்டை செய்யவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
பொரள்ளையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.