இலங்கை தொடர்பில் மீளவும் ஐ.நா ஆய்வு.

சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் சந்திப்பானது, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை, ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் மற்றைய நாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஈக்குவடோர் (8-9 நவம்பர்), பின்லாந்து (9-10 நவம்பர்), மொனாக்கோ (11, 14 நவம்பர்), இலங்கை (15-16 நவம்பர்), நமீபியா (18, 21 நவம்பர்), துர்க்மெனிஸ்தான் (21-22 நவம்பர்), ஆர்மேனியா (23-24 நவம்பர்), கேப் வெர்டே (24-25 நவம்பர்) ஆகிய நாடுகளுக்கான மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சித்திரவதை மற்றும் மற்றைய கொடுமைகள், மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டனை போன்றவை தொடர்பிலேயே குறித்த இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.