நாடளாவிய ரீதியாக இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மின்சார தடை ஏற்பட்டது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன.
எனினும் மின்சார விநியோகம் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் அதிகாலை 03.30 – 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து அறிக்கை தருமாறு மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
(riz)