(FASTNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று(31) நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
2க்கு0 என்ற கணக்கில் இலங்கை அணி இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், இன்றைய போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.