இலங்கை போக்குவரத்துச் சபை எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உதய கம்மன்பிலவினால் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சேவை தேசிய சொத்தாகும் இதனால் எந்தவகையிலும் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.