இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.