இலங்கை போக்குவரத்து சேவையின் 02ம் கட்ட சேவை…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையின் இரண்டாம் கட்ட சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

இதன்படி,எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பேருந்து சேவையினால், இலங்கை போக்குவரத்து சபைக்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான கிட்டியதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.